search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Finale"

    • அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நடந்தது.
    • இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    சிவகாசி

    மத்திய அரசால் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்'' போட்டியானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாக நடத்தப்ப–டுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து இந்த போட்டியை வருடம் தோறும் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என இரு பிரிவுகளாக நடத்துகிறது. சாப்ட்வேர் பிரிவுக்கான இறுதிசுற்று சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வருகிற 25-ந் தேதி மற்றும் 26 -ந் தேதிகளில் நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள பஞ்சாப், புதுடெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கோவா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்குகிறார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ.யை சேர்ந்த உத்யன் மவுரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி, வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை ஆன்லைனில் கலந்துரையாடுகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    ×