search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fever medical camp"

    • ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
    • முகாமில் மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டார பகுதிகளில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி ஆலோசனையின்படி சாத்தான்குளம் வட்டாரத்தில் கந்தசாமிபுரம், சுப்பராயபுரம், பொத்தகாலன்விளை, தாய்விளை, வாலிவிளை , பெரியதாழை மற்றும் எள்ளுவிளை ஆகிய 7 இடங்களில் மழைக்கால சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.

    முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர்.ஸ்வீட்லின் சசிதா தலைமையிலான குழுவினரும், ஆனந்தபுரம் சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் ரெய்சா தலைமையிலான மருத்துவ குழுவினரும், படுக்கப்பத்து சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு டாக்டர் குருசாமி தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர். காய்ச்சல் போன்ற சிறு உபாதைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். சித்த மருத்துவ பிரிவு மூலம் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், இளம் சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவத் திட்ட கிராம பெண் தன்னார்வல பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் முகாமில் கலந்து கொண்டனர். மக்களை தேடி மருத்துவத் திட்ட பெண் தன்னார்வல பணியாளர்கள் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்த பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. கிராம பகுதிகளில் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் மூலம் கொசுப்புழு ஒழிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • திண்டுக்கல் பள்ளிகளில் இன்று மருத்துவமுகாம் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தினசரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்து வந்தனர். குறிப்பாக காலாண்டுதேர்வு நெருங்கி வரும் சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டு வரும் பருவகால நோய்களினால் தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து இன்று மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    அதன்படி திண்டுக்கல் எம்.எஸ்.பி மற்றும் புனிதவளனார் பள்ளிகளில் இன்று மருத்துவமுகாம் நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் தொடர்ந்து சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவவேண்டும். முககவசம் அணியவேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×