search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female workers"

    • டாடாவின் புனே உற்பத்தி சாலையில், 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்
    • நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்கின்றன

    பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை அளித்து வரும் வாகன உற்பத்தித் துறையில் பல தசாப்தங்களாக பல நிறுவனங்களில், உற்பத்தி தளங்களில் ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு வந்தனர்.

    ஆனால், சமீப காலங்களாக உற்பத்தி தளங்களில், பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் அங்குள்ள அனைத்து துறையிலும் சிறப்பாக பணியாற்றுவது நல்ல மாறுதலாக பார்க்கப்படுகிறது.

    இதுநாள் வரை இருந்த மிக கடினமான பணிகளுக்கு உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நவீன கருவிகளும், இயந்திரங்களும் பயன்படுத்தப்படுவதாலும், அவற்றை இயக்கும் முறையில் துல்லியமான கையாளுதல் தேவைப்படுவதாலும் ஆண்களை விட அதிகளவில் பெண்களையே வாகன உற்பத்தி நிறுவனங்கள் பணியமர்த்த விரும்புகின்றன.

    சொகுசு கார், எலக்ட்ரிக் வாகனம், கனரக வாகனம் உள்ளிட்டவையின் உற்பத்தியில் நாட்டின் முன்னணியில் உள்ள டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன உற்பத்தி தளத்தில் 6500 பெண்கள், தொழில்நுட்ப வல்லுனர்களாக பணிபுரிகின்றனர்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அதிகமாக விற்பனையாகும் ஹேரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) ஆகிய சொகுசு கார்களை தயாரிக்கும் புனே உற்பத்தி சாலையில், ஆண்களே இல்லாமல் 3000 பெண்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


    இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தில் 3,500 பெண்கள் உற்பத்தி தளத்தில் பணிபுரிகின்றனர்.

    எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) எனும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் குஜராத் மாநில உற்பத்தி சாலையில், 3000 பணியாளர்களில் 34 சதவீதம் பேர் பெண்கள்.

    வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாலின பேதம் இன்றி அதிகளவில் பெண்களையும் பணிக்கு அமர்த்தி ஊக்குவித்து வருகின்றன.

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால், இயக்குவதற்கு கடினமான கருவிகள் மற்றும் இயந்திரங்களை கொண்டு செய்த பணிகளை, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களை கொண்டு எளிதாக இயக்குவது சாத்தியமாகி விட்டதால், பெண்களாலும் இப்பணிகளில் சிறப்பாக செயல்பட முடிகிறது. எனவே, அவர்கள் இத்துறையில் சேர நாளுக்கு நாள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    பெண்களை ஈர்க்கும் வகையில் இந்நிறுவனங்கள் போக்குவரத்து வசதி, பேறு கால விடுப்பு, செயற்கை கருத்தரிப்புக்கான மருத்துவ செலவு உள்ளிட்ட பல சலுகைகளை அளிக்க தொடங்கி உள்ளன.

    பென்ஸ் (Benz) கார் தயாரிப்பு நிறுவனம், பெண் ஊழியர்களுக்கு அவர்கள் பயில விரும்பும் திறன் மேம்பாட்டு கல்விக்கான உதவித்தொகை வழங்குகிறது.

    நாளுக்கு நாள் வாகனத் தேவைகள் அதிகரிப்பதால், இத்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    மில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரில் பணிபுரியும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் சுமங்கலி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபடியான நேரங்களில் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். பல இடங்களில் இளம் பெண்கள் வேலைக்காக கடத்தப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைக்காகவும், கட்டாய தொழிலாளியாகவும் மாற்றப்படும் நிலை உள்ளது. இவர்கள் பல சமயங்களில் பாலியல் அடிமைகளாக ஆளாக்கப்படுகின்றனர்.

    நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் வெளி நாடுகளில் இருந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் நீதி கிடைத்து விடுகிறது. மேலும் தவறு செய்தவர்களின் சொத்துகளும் முடக்கப்படுகிறது.

    எனவே இந்தியாவிலும் இது போன்று ஆள்கடத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களின் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை வழங்க சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×