search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Father-Sons"

    • இளவரசன் என்ற ஆஷா அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் இளவரசன் என்ற ஆஷா (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று இரவு அசோகர் தெரு பெருமாள் கோவில் அருகே இளவரசன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இளவரசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன், அவரது மகன்கள் மாதவன், சந்துரு உள்பட 4 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    ×