search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Insistence"

    • உய்யக்கொண்டான், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும்.
    • கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

    தஞ்சாவூர்,:

    தஞ்சையில் இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு வருவாய் கோட்டாட்சியர் ( பொ) பழனிவேல் தலைமை தாங்கினார். இதில் கோட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

    அப்போது விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    தமிழகத்திற்கு உரிய தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த செயல்களால் தமிழகத்திற்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காமல் உள்ளது.

    இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்திற்கு உரிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன.

    இதனால் அடுத்து சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

    இதேபோல் பயிர் காப்பீடு திட்டத்தை தொடங்க வேண்டும். உய்யக்கொண்டான் ,புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மின்சாரம், உர தட்டுப்பாடு இருக்கக் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரும்புக்கு சிறப்பு ஊக்க ஊதியமாகடன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதற்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது.

    எனவே வருகிற 25ஆம் தேதி முதல் -அமைச்சர் நாகை மாவட்டத்திற்கு வர உள்ளார்.

    அதற்கு முன்னதாக அரசாணை வெளியிட வேண்டும். கார்த்திகைப் பட்டத்தில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்ய உள்ளதால் தரமான நிலக்கடலை விதைகள் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    பாசனதாரர் விவசாய சங்க தலைவர் தங்கவேல் அளித்துள்ள மனுவில், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 70 நாட்கள் ஆகியும் கடமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

    குறுவை சாகுபடி செய்யப்பட்டு அடுத்து சம்பா சாகுபடி செய்ய ஆயத்தமாக உள்ள நிலையில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் நீர் பாசன பெற்றால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.

    சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு தண்ணீர் முறை வைக்காமல் நீர் விட வேண்டும்.

    கல்லணை கால்வாய் பிரிவில் மூன்றாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்ப ட்டால் கடைமடை பகுதிக்கு நீர் வர வாய்ப்பாக இருக்கும்.

    எனவே இதுகு றித்து அதிகாரி கள், விவசா யிகள் குழு அமைத்து நேரடி ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பி டப்ப ட்டுள்ளது.

    ×