search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farm training"

    • உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரக்கம்பை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை திட்டம் குறித்து விளக்கினார்.

    ஊட்டி மண் ஆய்வுக்கூட வேளாண் அலுவலர் நிர்மலா, காய்கறி தோட்டத்தில் ஏக்கருக்கு 10 புள்ளி 12 இடங்களில் முக்கால் அடி ஆழத்தில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார். உதவி மேலாண்மை உதவி இயக்குனர் ஜோதிகுமார் மண் மாதிரிக்கான செயல்முறை விளக்கம் அளித்தார்.

    அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் பேசும்போது உழவன் அட்மா திட்டம், வட்டார தொழில்நுட்பம், உழவன் செயலி பயன்பாடு மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் விளக்கினார். பிரவீனா மணிமேகலை நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆகியவை செய்து இருந்தன.

    ×