search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fail in exam"

    • அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார்.
    • 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வளையமாதேவி பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரது மகள் ஷாலினி (வயது 20). இவர் வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ. படித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு படிக்கும்போது 8 பாட பிரிவில் அரியர் வைத்துள்ளார். தற்போது அதற்கான தேர்வு எழுதி நேற்று தேர்வு முடிவு வெளிவந்துள்ளது.

    அதில் 2 பாடப்பிரிவில் தேர்ச்சியும் 6 பாடப்பிரிவில் தோல்வியும் அடைந்துள்ளார். அதனால் மன உளைச்சலில் கல்லூரிக்கு வரும்பொழுது கல்லூரியின் அருகில் 4 அரளிக்காயினை சாப்பிட்டுள்ளார். பின்பு மதியம் ஒரு மணி அளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

    தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதால் அவர்கள் அழைத்து வந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள். ஆத்தூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கல்லூரி மாணவியர் இடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×