search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Express service"

    வைகை, பல்லவன், திருச்செந்தூர், பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில் சேவையில் நாளை ஒரு நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை வண்டலூர்-கூடுவாஞ்சேரி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    திருச்செந்தூர்-சென்னை எக்ஸ்பிரஸ், காரைக்குடி- சென்னை பல்லவன் எக்ஸ் பிரஸ், மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ஆகியவை 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாகவும், திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகவும், லோக்மான்யா திலக்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் 30 நிமிடங்கள் தாமதாகவும் எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு வந்துசேரும்.

    சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக, 20 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாகவும், சென்னை-மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகவும், செங்கல்பட்டு-காக்கிநாடா துறைமுகம் சர்கார் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாகவும் புறப்பட்டு செல்லும்.

    இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×