search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Esakki Karvannan"

    • சேரன் தற்போது ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

    பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.


    தமிழ்க்குடிமகன்

    நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


    தமிழ்க்குடிமகன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தமிழ்க்குடிமகன்' திரைப்படத்தின் டீசர் இரண்டு நாட்களில் 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை நடிகர் சேரன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும், "2 நாட்களில் 20 லட்சம் மக்கள் பார்த்திருக்கிறார்கள்... இன்னும் 20 லட்சம் மக்களிடம் சொல்வதற்கான செய்தி உள்ள டீஸர் என்பது அவர்கள் பார்த்த வேகத்தில் தெரிகிறது.. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டியது நம் கடமை..." என்று பதிவிட்டுள்ளார்.



    இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள பெட்டிக்கடை படத்தை விஜய்யின் சர்கார் படத்துடன் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், சமுத்திரக்கனி அதனை தவிர்த்திருக்கிறார். #Pettikadai #Samuthirakani
    நடிகர் சமுத்திரகனி சமூக அக்கறை கொண்ட கதைகளை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் லட்சுமி கிரியே‌ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

    இசக்கி கார்வண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பெட்டிக்கடை என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக நடிக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமுத்திரகனி பேசும்போது, பெட்டிக்கடைகளின் அழிவு அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும் என்பதை இயக்குனர் சொல்லி இருக்கிறார். 

    இயக்குனர் திடீர் என்று ஒரு நாள் வந்து சர்கார் படத்துடன் நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம். அவங்க சர்காரைப் பற்றி சொல்றாங்க. நாம சமூக விரோதிகளைப் பற்றி சொல்றோம்.



    ஒரே தேதியில் ரிலீஸ் செய்வோம் என்றார். நான் தான் அப்படியெல்லாம் வேண்டாம். நமக்கு என்று ஒரு தேதி வரும் அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன். அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை’. இவ்வாறு சமுத்திரகனி பேசினார். #Pettikadai #Samuthirakani

    ×