search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode theft case"

    ஈரோடு அருகே திருட்டு வழக்கில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் கடையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். மேலும் இவர் மீது ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் கற்ற செயல்களில் ஈடுபட்டதாக 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் பிரபாகர், மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன் பேரின் போலீசார் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×