search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode News Youth"

    • கோபிசெட்டிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பையுடன் நின்று கொண்டு இருந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாண்டிதுரை (28) என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டிதுரையை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×