search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineering students"

    பொள்ளாச்சி அருகே என்ஜினீயரிங் மாணவர் அணையில் குளித்தபோது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரி சங்கர் (வயது 20). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஆழியாற்றில் உள்ள ஆரியாபுரம் அணையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரிசங்கரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×