search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ends tomorrow"

    • இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.
    • நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தேர் இழுக்கும் நிகழ்வை தொடர்ந்து 4 நாட்கள் தேர் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து நேற்று மாலை தேர் நிலையை வந்து அடைந்தது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ×