search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee commits Suicide"

    • மனைவி பிரிந்து பிரான்சில் வசிப்பதால் நகராட்சி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் நேத்தாஜி நகர் அசோகன் வீதியை சேர்ந்தவர் லோகநாதன்(வயது57). இவர் புதுவை நகராட்சியில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2009-ம் ஆண்டு தமிழ் செல்வி என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லாத நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்செல்வி கணவரை விட்டு பிரிந்து பிரான்சில் வசித்து வருகிறார். இதனால் லோகநாதன் தனது சகோதரர் ராமகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே லோகநாதனுக்கு இதய நோய் மற்றும் நீரழிவு நோய் இருந்து வந்தது. இதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மனைவி பிரிந்து பிரான்சில் வசித்து வந்ததால் லோகநாதன் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். #SupremeCourt
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலம், அவுரங்காபாத்தில் கல்வி இயக்குனரகத்தில் வேலை பார்த்து வந்த ஊழியர் ஒருவர், மேலதிகாரி தன்மீது அதிக பணிச்சுமையை சுமத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது மனைவி, சம்மந்தப்பட்ட அதிகாரி தன் கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்து, அதன்கீழ் இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் வழக்கு பதிவானது.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அந்த அதிகாரி மும்பை ஐகோர்ட்டை நாடினார். ஆனால் அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை நீதிபதிகள் அருண் மிஷ்ரா, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், சக ஊழியரை தற்கொலைக்கு தூண்டியதாக அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில், “ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று வேண்டுமென்றே திட்டமிட்டு இருந்தால் அது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 306-ன் கீழ் குற்றம்சாட்ட வாய்ப்பு உண்டு.

    ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரையில், கூறப்பட்டு உள்ள தகவல்கள் முற்றிலும் போதுமானவை அல்ல. மேலதிகாரி, ஊழியருக்கு சில வேலைகளை செய்யுமாறு பணித்தார் என்பதாலேயே குற்ற மனம் அல்லது தீய நோக்கம் இருந்தது என எடுத்துக்கொள்ள முடியாது” என கூறப்பட்டு உள்ளது. 
    ×