search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants roaming"

    • காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது
    • தொழிலாளர்கள் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை, மசக்கல் பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் அதிகப்படியான மலைகாய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இங்கு அதிகாலை நேரங்களில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் அவரை போன்ற மலைகாய்கறிகள் பறிக்கவும், நீர் பாய்ச்சவும் விவசாயிகள் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேயிலை, தோட்ட விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது.
    • மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் அமைந்துள்ள கடைசி கடசோலை, குள்ளங்கரை, ரங்கசாமிமலை, கொடநாடு மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வருடந்தோறும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம்.

    மேலும் மலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். மேலும் யானைகள் சாலைக்கு வராமல் தடுக்க தொடா்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனா்.

    ×