search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் யானைகள் நடமாட்டம்
    X

    கோத்தகிரியில் யானைகள் நடமாட்டம்

    • காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது
    • தொழிலாளர்கள் பாதுகாப்புடனும் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் தொரை, மசக்கல் பகுதியை சுற்றிலும் பல குக்கிராமங்கள் அமைந்துள்ளது.

    இப்பகுதியில் அதிகப்படியான மலைகாய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இங்கு அதிகாலை நேரங்களில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் அவரை போன்ற மலைகாய்கறிகள் பறிக்கவும், நீர் பாய்ச்சவும் விவசாயிகள் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் தற்போது சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் இந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டம் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    மேலும் தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்களை தாக்கும் அபாயமும் உள்ளது. எனவே, தேயிலை, தோட்ட விவசாய பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் சென்று வர வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×