search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants Dead"

    • மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது.
    • சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே கவுன்டன்யா வனப்பகுதி உள்ளது.

    இங்கு மான், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தமிழக- ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு யானைகள் கூட்டம் குடியாத்தம்-சித்தூர் செல்லும் பலமனேர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன.

    அப்போது அந்த வழியாக மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பெண் யானைகள், ஒரு ஆண் யானை பரிதாபமாக துடிதுடித்து இறந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி, பலமனேறு ரேஞ்சர் சிவனா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    லாரி மோதியதில் இறந்த யானைகளை மீட்டனர். மேலும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.
    • பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்துக்குட்பட்ட மாரண்டஅள்ளி காப்பு காட்டில் இருந்து சமீபத்தில் ஒரு மக்னா யானை, 2 பெண் யானைகள், 2 குட்டி யானைகள் வெளியேறின. இவை பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய், நல்லூர், சென்னப்பன் கொட்டாய் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரண்டஅள்ளி வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் சுற்றிய 5 யானைகளும் அப்பகுதியில் உள்ள காளிகவுண்டன் கொட்டாய்க்குள் புகுந்தன.

    அப்போது அங்கு சக்திவேல் என்பவரின் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 25 வயது மதிக்கத்தக்க மக்னா யானை, அதே வயதுடைய 2 பெண் யானைகள் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.

    இதில் அதிர்ஷ்டவசமாக 2 குட்டி யானைகள் உயிர் தப்பின. அவை உயிரிழந்த யானைகளை சுற்றி சுற்றி வந்தபடி பாசப்போராட்டம் நடத்தியது. மேலும், அந்த யானைகள் இறந்தது தெரியாமல் தனது துதிக்கையால் குட்டியானைகள் அதனை தட்டி எழுப்பி கொண்டிருந்தன.

    நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த பகுதி மக்கள் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்தில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர், இறந்த யானைகளிடம் பாச போராட்டம் நடத்தி கொண்டிருந்த குட்டியானைகளை பட்டாசு வெடித்து அருகே உள்ள வனப்பகுதிக்கு விரட்டினர்.

    பலியாகி கிடந்த 3 யானைகளுக்கும் அந்த இடத்திலேயே 20 பேர் கொண்ட கால்நடை குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 யானைகளின் உடல்களும் அந்த பகுதியில் பெரிய குழி தோண்டி புதைக்கப்பட்டன. யானைகள் புதைக்கப்பட்ட இடத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மாலைகள் வைத்தும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    3 யானைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நடந்த விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த பாறைக்கொட்டாயை சேர்ந்த முருகேசன் (வயது 60) என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக, மின்வாரியத்தினர் கொடுத்த புகாரின்பேரில் மாரண்டஅள்ளி போலீசாரும், முருகேசன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலக்கோடு வனத்துறையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, பாலக்கோடு பகுதியில் கடந்த மாதம் மக்னா யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த யானை விரட்டி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் வனத்துறையினர் அந்த மக்னா யானையை பிடித்து முதுமலை காட்டிற்கு கொண்டு சென்றனர்.

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி பகுதிகளில் குட்டிகளுடன் 5 யானைகள் சுற்றித்திரிந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் இரவில் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து நாசம் செய்து வந்தது.

    இந்த நிலையில் மாரண்டஅள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). இவர் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார்.

    இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார வயர்கள் அமைத்து உள்ளார்.

    இந்த மின் வயர்கள் நேரடியாக மின்சார கம்பத்தில் இருந்து திருட்டு தனமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தில் விட்டுள்ளார்.

    நேற்றிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த 5 காட்டு யானைகள் தண்ணீர், உணவு தேடி முருகேசன் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது விளைநிலத்தில் இருந்த மின்சார கம்பியில் சிக்கிய 40 வயது மதிக்கத்தக்க 2 பெண் யானை, ஒரு ஆண் யானை என 3 காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதிர்ஷ்டவசமாக இரண்டு குட்டி யானைகள் உயிர் தப்பியது.

    இதனை இன்று காலை அந்த வழியாக விவசாய விளைநிலத்திற்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பாலக்கோடு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்து கிடந்த யானைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினர் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயி முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து அந்த 3 யானைகளை உடற்கூராய்வு செய்ய மருத்துவக்குழுவினர் வந்தனர். அப்போது அந்த 3 யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள் தாயை விட்டு பிரிய முடியாமல் அங்கேயே சோர்ந்து போய் திகைத்து நின்றது. இதனால் வனத்துறையினர் அந்த குட்டி யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 3 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் உயிர்தப்பிய 2 குட்டி யானைகளை பாதுகாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.

    ×