search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elephant died"

    • குட்டி யானைைய வனத்துறையினர் தேடும் வருகின்றனர்.
    • 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.

    கோவை,

    தமிழக - கேரள எல்லையான வாளையார் அருகே நடுப்பதி ஊர் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் வாளையார் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவி த்தனர்.

    இதனையடுத்து வன அதிகாரி ஆஷிக்அலி தலைமையில் விரைந்து சென்று யானையின் சடலத்தை ஆய்வு செய்தனர்.அப்போது, கடந்த 14-ந் தேதி இரவு கன்னியாகுமரி- அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ஒரு குட்டியானை உட்பட 3 யானைகளுக்கு அடிபட்டது என ரெயில் என்ஜின் டிரைவர் தெரிவித்து இருந்தார்.

    இதில் 20 வயது மதிக்கத் தக்க பெண் யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.

    மற்றொரு பெண் யானையும், குட்டி யானையும் காயமடைந்த நிலையில் காட்டுக்குள் தப்பி சென்றது வனத்துறையினர் ஆய்வில் தெரிய வந்தது. இதனை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் பார்த்து ள்ளனர். காயமடைந்த யானைகளை அதிகாரிகள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில், காட்டில்தேன் மற்றும் நெல்லிக்கனி சேகரிக்க சென்றவர், நடுப்பதி காட்டுப்பகுதியில் அருவி ஒன்றின் அருகே காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.

    அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கால்நடை டாக்டர் ஜோயி டேவிட் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.

    யானை உடலை மீட்ட வனத்துறை ஊழியர்கள் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் வாளையார் வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி புதைத்தனர்.

    ரெயிலில் அடி பட்ட மேலும் ஒரு குட்டி யானையை வனத்துறை யினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    ×