என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Electricity Wires"
- கடந்த சில மாதங்களாகவே உவரியில் உள்ள தோட்டத்தில் மின்சார வயர்கள் திருடப்பட்டு வருகின்றது.
- இதனால் விவசாயிகள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் உவரி அருகே குட்டம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் தென்னை, முருங்கை, மா, வாழை போன்ற பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தங்களது நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தும், கிணறு தோண்டியும் அதில் மோட்டார் அமைத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே அதில் உள்ள மின்சார வயர்கள் திருடப்பட்டு வருகின்றது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களில் வயர்கள் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்