search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edaiyur"

    கிண்டல் செய்த தகராறில் கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் எடையூரை அடுத்த சித்தாலத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி சுபா (வயது 20). சுபாவின் தம்பி பாண்டியராஜன் இவர்கள்  3 பேரும் ரோட்டில் நடந்து சென்ற போது பாண்டியராஜன் சுபாவை கிண்டல் செய்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சுரேஷ் என்பவரது மனைவி ராஜேஸ்வரி தன்னைதான் பாண்டியராஜன் கிண்டல் செய்ததாக கருதி அவரிடம் தகராறு செய்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த சுரேஷ், பாண்டியராஜனை தாக்க முயன்றுள்ளார். இதனை தடுக்க முயன்ற சுபாவின் வயிற்று பகுதியில் சுரேஷ் காலால் எட்டி உதைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் 8 மாத கர்ப்பிணியாக சுபாவின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    இதுபற்றிய புகாரின் பேரில் எடையூர் சப்-இன்ஸ் பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்குபதிவு செய்து சுரேசை தேடி வருகிறார்.
    ×