search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "e-Nam App through Bidding"

    • பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.
    • இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்க–மேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் இ-நாம் செயலி மூலம் நடைபெற்ற ஏலத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 521கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.15.10-க்கும், சராசரியாக ரூ.18.56-க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.98ஆயிரத்து 326-க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 2 ஆயிரத்து 90 கிலோ தேங்காயை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதில் அதிகபட்சமாக தேங்காய் கிலோ ஒன்று ரூ.25.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.00- க்கும், சராசரியாக ரூ.23.00-க்கும் ஏலம் நடைபெற்றது.

    மொத்தம் ரூ.50 ஆயிரத்து 98- க்கு ஏலம் நடைபெற்றது. ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19- க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து550 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.82-க்கும், குறைந்த பட்சமாக ரூ.53.66-க்கும், சராசரியாக ரூ.78.88-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 68 ஆயிரத்து 464-க்கு ஏலம் போனது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் வேளாண் பொருள் விற்பனைக்கான பணத்தை நேரடியாக செலுத்தினர்.

    ×