search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dumping of chicken waste"

    • இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.
    • கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பைபாஸ் சாலையில் சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இச்சாலையையொட்டி ஆனந்த சராகம் ஏரிக்கு செல்லும் ஓடை உள்ளது.

    இந்த ஓடையில் கவுந்த ப்பாடி மற்றும் சுற்றுப்பகு தியில் உள்ள கோழி உள்ளி ட்ட இறைச்சி கடையினர், இரவு நேரங்களில் கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவு, குடல், எலும்புகள் போன்ற வற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நாய் உள்ளிட்ட பல விலங்குகள், அவற்றை தூக்கி சென்றும், சாலை உள்ளிட்ட பல இடங்களில் விட்டு செல்கின்றன.

    இதுபோல கோவில் பகுதியிலும் இறைச்சி கிடப்பதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் மக்களும், பக்தர்களும் சிரமப்படு கின்றனர். இது பற்றி ஏற்கனவே பல அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே கலெக்டர் நேரடியாக தலையிட்டு இப்பிரசனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    இறைச்சி கழிவுகளை வேறு இடத்தில் கொட்டி பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் வாட்ஸ்-அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அனுப்பியுள்ளனர்.

    ×