search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dugged"

    • அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது.
    • நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அவிநாசி :

    கோவை மாவட்ட எல்லையான அன்னூரில் உருவாகி அவிநாசியை கடந்து திருமுருகன்பூண்டி வழியாக, செல்லும் நல்லாறு திருப்பூரில் நொய்யல் ஆற்றுடன் இணைகிறது. அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள வீடு, ஓட்டல் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஓடையில் கலப்பதால் ஓடை மாசடைந்துள்ளது.

    இருப்பினும், அணைப்புதூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள நல்லாற்றில், வெள்ளம் ததும்பி நிற்கிறது. மழை மறைவு பகுதியாக அவிநாசி இருந்தும், சில ஆண்டுகளாக பருவமழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.ஒரு காலத்தில் நல்லாற்று நீர், சுற்றியுள்ள பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன தேவையையும் பூர்த்தி செய்துள்ளது. எனவே நல்லாறு துவங்கும் இடத்தில் இருந்து முடியும் இடம் வரை சுத்தம் செய்து, தூர்வாரினால், நீர் வளம் பெருகுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×