search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Due to increase in supply of fish"

    • மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
    • கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இங்கு கடல் மீன்கள் விற்கப்படு கின்றன. தூத்து க்குடி, நாகப்பட்டினம், காரை க்கால், கேரளா, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து கடல் மீன்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்க சாதாரண நாட்களை விட வார இறுதி நாட்களில் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வரும். ஏனெனில் ஆடி மாதம் காரணமாக கடந்த சில வாரமாக மீன்கள் விற்பனை மந்த நிலையில் இருந்தது.

    ஆனால் இன்று மீன்கள் வரத்து அதிகரித்து விலையும் குறைந்ததால் வியா பாரம் கடந்த வாரத்தை விட விறு விறுப்பாக நடைபெற்றது.

    இன்று மீன் மார்க்கெட்டிற்கு 16 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. மீன் வரத்து அதிகரித்து காணப்பட்டதால் கடந்த வாரத்தை விட இன்று மீன்கள் கிலோ ரூ.50 முதல் ரூ.150 வரை விலை குறைந்து காணப்பட்டது. ரூ.1,200-க்கு விற்கப்பட்ட வஞ்சரம் இன்று கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து ரூ.800-க்கு விற்கப்பட்டது.

    இதேபோல் 550 ரூபாய்க்கு விற்கப்பட்ட விளாமீன் 450-க்கும், 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய் பாறை 450-க்கும், 450-க்கு விற்க ப்பட்ட சீலா 350-க்கும், 650-க்கு விற்கப்பட்ட நண்டு 500 ரூபாய்க்கும், 450-க்கு விற்க ப்பட்ட பொட்டு நண்டு 350-க்கும், 350-க்கு விற்கப்பட்ட அயிலை 300 ரூபாய்க்கும்,

    700 ரூபாய்க்கு விற்கப்பட்ட இறால் 650-க்கும், 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளை வாவல் 600 ரூபா ய்க்கும், 650-க்கு விற்கப்பட்ட கருப்பு வாவல் 500 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட மயில் மீன் 600 ரூபாய்க்கும், 600-க்கு விற்கப்பட்ட கிளி மீன் 500-க்கும், 350-க்கு விற்கப்பட்ட நெத்திலி 250-க்கும் விற்கப்பட்டது.

    இதேப்போல் மற்ற மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-கேரளா மத்தி-250, சின்ன இறால்-500, திருக்கை -300, சூரி-300-க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் போன வாரம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட கடுவா இந்த வாரம் 100 ரூபாய் அதிகரித்து 350-க்கு விற்கப்பட்டது. 

    ×