search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Due to continuous rain water"

    • கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
    • ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியான வட்டகானல் அருவி, பாம்பார்புரம் அருவி, பேரிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வெள்ளியை உருக்கியது போல் கொட்டுகிறது.

    இயற்கை எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தொடர் மழையால் கொடைக்கானல்- பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு சாலையிலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. எனவே சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆபத்தை உணராமல் வித்தியாசமாக புகைபடம், செல்பி எடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்கின்றனர். திடீரென நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.40 அடியாக உள்ளது. நேற்று 1509 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2122 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து 1611 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4352 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவ தாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் நேற்று 54.59 அடியாக இருந்தது.

    இன்று காலை 55.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1612 கன அடி மதுரை குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு என மொத்தம் 969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 2770 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக வும், சோத்து ப்பாறை அணை நீர் மட்டம் 76.26 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 43, தேக்கடி 28, கூடலூர் 4.7, உத்தமபாளையம் 4.8, வீரபாண்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×