search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking alcohol problem"

    மதுரை ரெயில் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பெரும்பாலான ரெயில்கள் பராமரிப்பின்றியும், சுகாதார மின்றியும் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

    இது குறித்து பயணிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

    இது குறித்து ரெயில்வே பணியாளர்களிடம் கேட்ட போது, மதுரை ரெயில் நிலையத்தில் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்கள் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் கதவுகள் பூட்டப்படுவதில்லை.

    எனவே காதல் ஜோடிகள் மற்றும் ‘குடி’மகன்கள் ரெயில் பெட்டிக்குள் ஏறி கழிவறைகளை அசுத்தம் செய்கின்றனர். தட்டிக் கேட்டால் மிரட்டுகின்றனர். இதனால் எங்களால் துப்புரவு பணிகளை சரியாக செய்ய முடியவில்லை.

    போதிய அளவு போலீஸ்காரர்கள் இல்லாததால் பிளாட்பாரங்களில் பாதுகாப்பு பணியும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

    குடிமகன்கள் மது பாட்டில்களை கழிப்பறைகளில் வீசிச் செல்வதால் தற்போதுள்ள பயோ டாய்லெட்டுகளில் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

    எனவே பிளாட்பாரங்களில் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படும் ராமேசுவரம், திண்டுக்கல் ரெயில்களின் கதவை உடனே மூடி விடவேண்டும். ரெயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக கதவை திறக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர்கள் கூறினர்.

    ×