search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drink Wine"

    • வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
    • ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார மன்னயார் தெருவில் உள்ள கோவிலில் பால்குடம் திருவிழா நடைபெற்றது.

    இதே தெருவை சேர்ந்த சுகுமார் மனைவி திருச்செல்வி (வயது 35) என்பவரது வீட்டிற்கு உறவினரான திருச்சியை சேர்ந்த மணவாளன் என்பவர் கோவில் திருவிழாவிற்காக வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் அருகே அதே தெருவை சேர்ந்த சிவா (30), பிராங்கிளின் (31) ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த மணவாளன் இங்கிருந்து மது அருந்தாதீர்கள் என அவர்களை தட்டி கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மணவாளன் நடந்த விவரங்களை திருச்செல்வியிடம் கூறினார்.

    இதையடுத்து திருச்செல்வி, மணவாளன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் நடந்த சம்பவங்கள் குறித்து தட்டி கேட்டனர்.

    இதில் சிவா ஆத்திரமடைந்து கத்தியால் திருச்செல்வி மற்றும் அவரது 10 வயது மகள் ஆகியோரை குத்தினார்.

    மேலும் அவரது ஆதரவாளர்கள் செல்வராஜ், திருக்குமரன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

    இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திருச்செல்வி உள்பட 4 பேரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

    பிராங்க்ளினிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×