என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Double Train Work"

    • பொங்கல் திருநாளுக்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
    • பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து இரட்டை ரெயில்பாதை பணியினை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி தென்னக ெரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது-

    இரட்டை ெரயில் பாதை மற்றும் பராமரிப்பு காரணமாக தென்னக ெரயில்வே செய்திக்குறிப்பில் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் அந்யோதயா சிறப்பு ரெயில்கள், மற்றும் பல தென்மாவட்ட ெரயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் இன்று (9-ந்தேதி) மற்றும் 10,11-ந்தேதிகளில் ரத்து செய்யப்படும் என்று தென்னக ெரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கல் திருநாளுக்காக தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    இப்படியான கால கட்டத்தில் முக்கிய வழித்தடத்தில் ெரயில்கள் ரத்து செய்யப்படுவது பொதுமக்களை வெகுவாக பாதிக்கும். பஸ் பயணத்திற்காக மக்கள் முந்தி அடிக்கும் நிலை ஏற்படும். ஆம்னி பஸ் கட்டணமும் அதிகரிக்கும்.

    இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு தென்னக ெரயில்வே மதுரை மண்டல பராமரிப்பு பணிகள் குறிப்பாக இரட்டை ெரயில்பாதை பணியினை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் 3 நாட்கள் கழித்து செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×