search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Special Trains"

    • கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.
    • தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.

    திருப்பூர்:

    வருகிற 24ந்தேதி தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோருக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சிறப்பு ெரயில் குறித்த விரிவான அறிவிப்பை தெற்கு ெரயில்வே வெளியிடவில்லை. கூட்ட நெரிசல் உள்ள வழித்தடங்களில் அவ்வப்போது ஓரிரு ெரயில் மட்டுமே அறிவிக்கப்பட்டு வருகிறது.

    தினசரி இயங்கும் 85 சதவீத ெரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. கோவை மற்றும் சென்னையில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை வழித்தடத்தில் செல்லும் ெரயில்களில் இருக்கைகள் நிரம்பி, காத்திருப்போர் பட்டியல் துவங்கியுள்ளது. பண்டிகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சிறப்பு ெரயில்கள் குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை.

    இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில்,கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ெரயில் இயக்க வாய்ப்புள்ளது.

    இந்த வார இறுதிக்குள் சிறப்பு ெரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். தற்போது முன்பதிவு நிறைந்துள்ள பெட்டிகளில் தேவையிருப்பின் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றனர்.

    ×