என் மலர்
நீங்கள் தேடியது "District levell"
- டேக்வாண்டோ போட்டியை மாநகராட்சி துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார்.
- இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியை மாநகராட்சி துணை மேயர் ராஜூ தொடங்கி வைத்தார். இதில் சங்கத்தின் தலைவர் நாகூர் மீரான், செயலாளர் சுடலை சுரேஷ், பொருளாளர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 7 வயதுக்குட்பட்டோர், 11, 14 மற்றும் 17 வயதுக்குட்பட்டோருக்கு என தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இன்று மாலை பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.