என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Distribute"
- 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
- விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது திட்ட குடிநீரை அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.
மேயர் தினேஷ்குமார் பேசும்போது ,மாநகரில் 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அனைத்து வார்டுகளிலும் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் திறப்புக்கான மண்டல பகுதிகள் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.
இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்