search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Distribute"

    • 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.
    • விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 4-வது திட்ட குடிநீரை அனைத்து வார்டுகளுக்கும் சீரான முறையில் வினியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கினார்.

    மேயர் தினேஷ்குமார் பேசும்போது ,மாநகரில் 4-வது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை என்ற வகையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் அனைத்து வார்டுகளிலும் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குடிநீர் திறப்புக்கான மண்டல பகுதிகள் குறைக்கப்பட்டு ஒரே நேரத்தில் பெரும்பாலான இடங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

    இந்த கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    ×