search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Direct consultation"

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
    • ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்தனர்.

    கோவை:

    தமிழக அரசு கல்லூரிகளில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, புலியகுளம் அரசு மகளிர் கலை கல்லூரி மற்றும் தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் ஆகிய 6 அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்கியது.

    இதில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலையில் பி.ஏ., பி.காம்.,பி.எஸ். சி. பி.பி.ஏ., உள்ளிட்ட 26 படிப்புகள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், மொத்தம் 1,466 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதற்காக, 27 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதையடுத்து, தரவரிசை அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி அவர்களின் செல்போன் மற்றும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு காலை 10 மணியளவில் தொடங்கியது. இதற்காக, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 700 பேர், சிறப்பு பிரிவு, என்.சி.சி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 200 பேர் என மொத்தம் 900 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து, ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்தாய்வில் பங்கேற்றனர். வருகிற 8-ந் தேதி முதல் பொதுப் பிரிவு மாணவர்க ளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மேலும், புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் நடப்பாண்டில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் உள்பட 5 பாடப்பிரிவுகளில் மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்த னர்.

    ×