என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "died of electrocution"
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.
- கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்ைட அருகில் உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(37). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.
நேற்றுஇரவு பாண்டி கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறி துடித்தார். இதைபார்த்ததும் அவரது மனைவி உதயசூரியா(30) என்பவர் தனது கணவரை காப்பாற்றுவதற்காக முயன்றார். கணவரை தள்ளிவிட்ட மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயத்துடன் 2 பேரையும் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே உதயசூரியா இறந்துவிட்டார்.
கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாண்டி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்