search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி
    X

    கோப்பு படம்.

    நிலக்கோட்டையில் கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலி

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.
    • கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்ைட அருகில் உள்ள குளத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி(37). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவர் தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு மேற்கூரை அமைக்கப்பட்டு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது.

    நேற்றுஇரவு பாண்டி கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அலறி துடித்தார். இதைபார்த்ததும் அவரது மனைவி உதயசூரியா(30) என்பவர் தனது கணவரை காப்பாற்றுவதற்காக முயன்றார். கணவரை தள்ளிவிட்ட மனைவி மீது மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயத்துடன் 2 பேரையும் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே உதயசூரியா இறந்துவிட்டார்.

    கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பாண்டி பலத்த காயத்துடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×