search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees who"

    • பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவி லில் ஆண்டு தோறும் மாசி திருவிழா நடை பெறு வது வழக்கம்.

    இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுகளுடன் விழா தொடங்கியது. இத னைத் தொடர்ந்து 21-ந் தேதி மாரியம்மன் கோவி லில் கம்பம் நடப்பட்டு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து 22-ந் தேதி செல்லாண்டி அம்மன் கோவிலில் கொடியேற்ற ப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் 12 மணி வரை ஆயிரக்கண க்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லியாண்டியம்மன் - மாரியம்மன் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு மேற்கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று காலை சக்தி அழைத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து செல்லாண்டி அம்மன் கோவிலில் இருந்து புது பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில் வரை சக்தி அழைத்துச் செல்லப்பட்டு பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாட்டனர்.

    அதேபோல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சியின் போது எல்லையம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி அழைத்து வரப்பட்டது.

    அப்போது ஆயிரக்க ணக்கான பக்தர்கள் உடம்பில் சேறு பூசி கொண்டும் அம்மன் வேடம் உள்பட பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கொண்டும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பக்தர்கள் உப்பு, மிளகு, வாழைப்பழம், தேங்காய், பிஸ்கட், புது துணி, பேனா, பென்சில் உட்பட பல வகை யான பொருட்களை சூறை யிட்டு வழிபாடு மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை செல்லாண்டி யம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

    நாளை இரவு 8 மணிக்கு கம்பம் எடுத்து காவிரி ஆற்றில் விடப்படு கிறது. வரும் 3-ந் தேதி பரிவேட்டையும், 4-ந் தேதி தெப்ப உற்சவம், 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. 

    ×