search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees gathered in perur"

    • திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பேரூர்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை நாளில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்துவது வழக்கம்.

    பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி எள்சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில், ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழா சமயங்களில், கொரோனா தொற்று குறைந்தன் காரணமாக, பேரூர் படித்துறையில் திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக, இன்று காலை மகாளய அமாவாசையை யொட்டி, பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் படித்துறையில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். படித்துறையில் திரண்ட பக்தர்கள், பொதுமக்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தனர்.

    இதையடுத்து, பேரூர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மகாளய அமாவாசை வழிபாட்டை ஒட்டி, பேரூர் நொய்யல் படித்துறை, கோவில் நுழைவாயில் மற்றும் பேரூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழிபாட்டுக்கு, அதிகமான பக்தர்கள் திரண்டதால்,இன்று காலை பேரூர் பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.
    • பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டன.

    பேரூர்:

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோவை மாவட்டம் பேரூர் படித்துறையில் இன்று காலை முதலே பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். பக்தர்கள் படித் துறையில் வாழை இலை விரித்து தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்த–னர். பின்னர் அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர்.

    திருமணமாகாத இளம்பெண்கள் திருணம் நடைபெற வேண்டி ஆற்றின் கரையோரத்தில் 7 கூழாங்கற்களை எடுத்து அதனை 7 கன்னிமார்களாக உருவகித்து வழிபட்டனர். திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். சுமங்கலி பெண்கள் ஒருவ–ருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக கொண்டனர்.

    இேதபோல் இறந்து போன குழந்தைகளை நினைத்து காதோலை, கருகுமணி, தாழை மடல், நாணல் இழை மற்றும் பலகாரங்கள் வைத்து இலைப்படையல் வழிபாடும் நடத்தினர்.இதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பின்னர் பக்தர்கள் பேரூர் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் உள்ள பசுமாடுகளுக்கு அகத்திக்கீரைகளும் வழங்கினர்.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு அன்று பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து காலை முதலே பேரூர் படித்துறைக்கு பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் இருந்தனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டமான திருப்பூர், நீலகிரி பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்தனர்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் மாற்றப்பட்டிருந்தது. கோவை நகர் பகுதியில் இருந்து பேரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பேரூர் தமிழ் கல்லூரியிலேயே திருப்பி அனுப்பப்பட்டன.

    அதேபோல் பேரூர் பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் வழியாக உக்கடம் வந்து, நகர் பகுதிக்குள் வந்தது.

    ×