search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூர் படித்துறையில் திரண்ட பக்தர்கள்
    X

    பேரூர் படித்துறையில் திரண்ட பக்தர்கள்

    • திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
    • போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பேரூர்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை நாளில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்துவது வழக்கம்.

    பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி எள்சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இந்நிலையில், ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழா சமயங்களில், கொரோனா தொற்று குறைந்தன் காரணமாக, பேரூர் படித்துறையில் திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.

    இதன் தொடர்ச்சியாக, இன்று காலை மகாளய அமாவாசையை யொட்டி, பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் படித்துறையில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். படித்துறையில் திரண்ட பக்தர்கள், பொதுமக்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தனர்.

    இதையடுத்து, பேரூர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மகாளய அமாவாசை வழிபாட்டை ஒட்டி, பேரூர் நொய்யல் படித்துறை, கோவில் நுழைவாயில் மற்றும் பேரூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழிபாட்டுக்கு, அதிகமான பக்தர்கள் திரண்டதால்,இன்று காலை பேரூர் பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×