search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy Mayor Balasubramaniam's"

    • தமிழ்நாடு அரசு குடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி துணைமேயர் பாலசுப்பிர மணியம், அரசு போக் குவர த்துக்கழக மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுகுடிசைமாற்று வாரியத்தால் அமைக்கப்ப ட்ட குடியிருப்பு பகுதியில் 1200 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசிக்கிறார்கள். நான் இப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்றபோது, போதிய போக்குவரத்துவசதியின்றி மிகவும் சிரமப்படுவதாக, இக்குடியிருப்பில் வசிக்கின்ற மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் தெரிவித்தனர். எனவே, இங்கு வசிக்கும் பொது மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு பகுதியில் அரசு பேருந்து நின்று செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும், வாவிபாளையம் வரை வந்து செல்லும் அரசு பேருந்து எண் 11சி, 46,55, 11 மற்றும் கணக்கம்பாளையம் வரை வந்து செல்லும் பேருந்து எண் 43 ஆகியவற்றின் வழித்தடத்தை மேற்கண்ட குடியிருப்பு பகுதிக்கு வந்து செல்லும் வகையில் நீட்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.

    ×