என் மலர்
நீங்கள் தேடியது "Deputy chief minister O Panneer selvam"
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4½ லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டில் 13 லட்சம் குடிசைப் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குடிசைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.1½ லட்சம் வழங்குகிறது. தமிழக அரசு ரூ.7½ லட்சம் கொடுக்கிறது. வீட்டு உரிமையாளர் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். இதன்படி தற்போது தமிழ்நாட்டில் 4½ லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:-
தமிழ்நாட்டில் 13 லட்சம் குடிசைப் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குடிசைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.1½ லட்சம் வழங்குகிறது. தமிழக அரசு ரூ.7½ லட்சம் கொடுக்கிறது. வீட்டு உரிமையாளர் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். இதன்படி தற்போது தமிழ்நாட்டில் 4½ லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly






