search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Depositing Post Matric"

    எஸ்.சி. மாணவர்கள் கல்லூரி கல்வி கட்டணம் குறித்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
    புதுடெல்லி:

    எஸ்.சி. மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இப்போது அந்த கல்வி உதவித்தொகை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் அரசிடம் இருந்து உதவித்தொகை வரும் வரையில் கல்வி கட்டணம் செலுத்த முடியாது என்பதால் கல்லூரியில் எஸ்.சி. மாணவர்களுக்கு இடம் மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

    இந்த நிலையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு மத்திய சமூக நலத்துறை மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

    அந்த கடிதத்தில் எஸ்.சி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அவர்களது வங்கி கணக்கில் அரசு செலுத்தும் வரையில், அவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 
    ×