என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » department of horticulture
நீங்கள் தேடியது "Department of Horticulture"
- மேலகுப்பத்தில் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அளிக்கப்பட்டு வருகிறது
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆற்காடு:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில், மேலகுப்பம் கிராமத்தில் தரிசுநில மேம்பாட்டு திட் டத்தின்கீழ் தோட்டக்கலை துறையின் மூலம் மா செடிகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தபணிகளை தோட்டக்கலை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், தோட்டக்கலை துணை இயக்குனர் லதாமகேஷ், வேளாண்மை துறை துணை இயக் குனர் செல்வராஜ், பொறியியல்துறை செயற்பொறியாளர் ரூபன்குமார், ரவிக்குமார் ஆற்காடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொறுப்பு) வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் விக்னேஷ், துணை அலுவலர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
திருமருகல் ஒன்றியத்தில் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியத்தில் பனங்குடி, ஏர்வாடி, அம்பல், போலகம், கீழப்பூதனூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஏர்வாடி ஊராட்சியில் திருமருகல் வட்டார ஆத்மா திட்ட குழு தலைவர் செல்வசெங்குட்டவன் தலைமை தாங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) கலைச்செல்வன் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒரு ஊராட்சிக்கு 100 விவசாயிகள் விகிதம் 3 தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வரப்பு உளுந்து பயறுகள் வழங்கப்பட்டது. 5 விவசாயிகளுக்கு கைத்தறிப்பான்கள் மானியத்திலும், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட்டது. தோட்டக்கலைத்துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் உயிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஊராட்சி செயலாளர் சரவணன், ஆத்மா திட்ட குழு உறுப்பினர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் கீழப்பூதனூர் ஊராட்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் ஆகியோர் தலைமை தாங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.
பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் தலைமையிலும், அம்பல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீதளா பாலாஜி தலைமையிலும், போலகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலாளர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X