search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dengue study"

    திருவாரூரில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் திரையரங்கம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் காட்டுக்கார தெரு. பேபி டாக்கீஸ் ரோடு, பனகல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல் ராஜ் இன்று காலை டெங்கு கொசு ஒழிப்பு குறித்த நேரடி ஆய்வு நடத்தினார். அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத தனியார் திரையரங்கம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம், பழைய இரும்பு கடை ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பார்வையிட்டு தேவையற்ற குப்பைகளை பொதுவெளியில் கொட்ட வேண்டாம் என அறிவுறுத்தினார்

    பின்னர் இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுற்றுப்புறத்தை முறையாக பராமரிக்காத வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.3.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 189 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இதுவரை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவாரூரில் 2-வது நாளாக நடந்த டெங்கு ஆய்வில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்றதாக மெக்கானிக் கடைக்காரருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.#DenguFever
    திருவாரூர்:

    தமிழகம் முழுவதும் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 பேருக்கு டெங்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

    சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சித்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தலைமையில் திருவாரூர் நகரத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளைக் கண்டறிந்து அதனை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று 2-வது நாளாக திருவாரூர் பழைய ரெயில்வே நிலைய சாலை, வாழ வாய்க்கால், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மற்றும் கடைகளை பார்வையிட்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி அறிவுறுத்தினார்.

    மேலும் மெக்கானிக் கடைக்காரருக்கு ஒன்றுக்கு ஆயிரம் அபராதம் விதித்தார். நேற்று தொடங்கி நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை சுமார் 5 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் நகரம் முழுவதும் இதுபோன்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் குப்பைகளையும் தண்ணீரையும் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி தெரிவித்தார். #DenguFever
    ×