search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dena Bank"

    பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் 3 வங்கிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #VijayaBank #DenaBank #BarodaBank #Merger
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக, பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    பொதுத்துறை வங்கிகளான இந்த 3 வங்கிகளையும் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பரிசீலித்து வந்தது. ஆனால் இதற்கு வங்கி கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடத்தி வந்தது. எனினும் இந்த இணைப்புக்கு மத்திய மந்திரிசபை தற்போது ஒப்புதல் அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன் மூலம் விஜயா மற்றும் தேனா வங்கிகளின் வர்த்தகம், சொத்துகள், உரிமைகள், உரிமங்கள், ஒப்புதல்கள் உள்ளிட்ட அனைத்தும் பரோடா வங்கியுடன் இணைக்கப்படும்.

    மேற்படி 2 வங்கிகளின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் புதிய வங்கியில் அதே பணிநிலையில் தொடர்வார்கள். அவர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் அனைத்தும் தொடர்ந்து அதே நிலையில் வழங்கப்படும். அவர்களின் நலன்கள் காக்கப்படுவதை பரோடா வங்கி உறுதி செய்யும்.



    இந்த இணைப்பு மூலம் பரோடா வங்கி நாட்டின் 2-வது பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும். வருகிற நிதியாண்டு முதல் (ஏப்ரல் 1-ந் தேதி) இந்த 3 வங்கிகளும் இணைந்து ஒரே வங்கியாக செயல்படும் என மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டது.

    இதைத்தவிர வட்டி சமநிலைப்படுத்தும் திட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியாளர்களையும் இணைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. வர்த்தகத்துறை கொண்டு வந்த இந்த பரிந்துரையை மந்திரிசபை ஏற்றுக்கொண்டு இருப்பதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் ரூ.600 கோடி வரை பலனடைய முடியும்.

    இதைப்போல குடும்ப நலத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்வஸ்தா நக்ரிக் அபியான், கருத்தடை சாதனம் வழங்குதல் உள்ளிட்ட 5 திட்டங்களை 2020-ம் ஆண்டு வரை தொடர்வது என மந்திரிசபை முடிவு செய்தது.

    மேலும் ‘பழங்குடியினர் திருத்த மசோதா 2018’-க்கும் மந்திரிசபையில் ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த தகவல்களை மந்திரிசபை கூட்டத்துக்குப்பின் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  #VijayaBank #DenaBank #BarodaBank #Merger 
    விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்கும் அரசின் முடிவுக்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்தது. #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger
    புதுடெல்லி:

    விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைப்பதை எதிர்த்து வங்கிப் பணியாளர்களின் 9 சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 26-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. எனினும், இந்த இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

    இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.



    இந்த இணைப்பின் மூலம் இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். #DenaBankmerger #VijayaBankmerger #BoBmerger 
    7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 14 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். #BankStrike
    சென்னை:

    பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கண்டித்து கடந்த 21-ந்தேதி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் மத்திய அரசு இதை கண்டுகொள்ளவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

    வங்கி ஊழியர்கள் ஏற்கனவே வேறு சில பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், வங்கி ஊழியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகியவை வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.

    இதில் சுமார் 85 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணிபுரியும் சுமார் 14 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் முடங்கின. கடந்த 21-ந்தேதி நடந்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.


    ஆனால் இன்று நடந்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தில் வங்கி அதிகாரிகளுடன் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கிகளின் பணிகள் 100 சதவீதம் நடைபெறவில்லை.

    தமிழ்நாட்டில் சுமார் 15 ஆயிரம் வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகள் அனைத்தும் இன்று முடங்கின. எந்தவித பணியும் நடைபெறவில்லை.

    தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படாததால் சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை பணபரிவர்த்தனை பாதிப்புக்குள்ளானது. பல ஊர்களில் ஏ.டி.எம். சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்தியாவில் தினமும் வங்கிகள் மூலம் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி காசோலை பணபரிவர்த்தனை நடைபெறும். காசோலை பணப்பரிவர்த்தனை இன்று நாடு முழுவதும் நடக்கவில்லை. இதனால் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கான காசோலை பணப்பரிவர்த்தனை நடக்கவில்லை.

    இது தனியார் தொழில் நிறுவனங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தனி நபர்களும் இன்று வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும், பணம் செலுத்த முடியாமலும் அவதிக்குள்ளானார்கள்.

    வங்கி ஊழியர்கள் எந்த வித கணக்குகளையும் பார்க்க மறுத்து விட்டதால் ஏற்றுமதி - இறக்குமதி நடவடிக்கைகளிலும் பாதிப்பு காணப்பட்டது. அரசாங்க கருவூல கணக்குகளிலும் வங்கி ஸ்டிரைக்கின் தாக்கத்தை உணர முடிந்தது.

    வங்கி அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி ஸ்டிரைக் செய்ததைத் தொடர்ந்து 22, 23-ந்தேதிகளிலும் வங்கிப் பணிகள் முடங்கின. நேற்று முன்தினம் மட்டும் மீண்டும் வங்கி சேவைகள் நடந்தன.

    நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காரணமாக வங்கிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் இன்று வங்கி பணிகள் முடங்கி உள்ளன.

    கடந்த 20-ந்தேதிக்கு பிறகு 6-வது நாளாக வங்கி சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ச்சியான வங்கி சேவை முடக்கம் காரணமாக மக்கள் மத்தியில் பாதிப்பு அதிகரித்துள்ளது. #BankStrike
    பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை மூன்றும் ஒன்றாக இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாற உள்ளது. #BankofBaroda #DenaBank #VijayaBank
    புதுடெல்லி:

    நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகளையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்கான அனைத்து பணிகளும் நடந்து வரும் நிலையில், மேற்கண்ட மூன்று வங்கிகளும் இணைந்தால் அது நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக இருக்கும் என நிதிச்சேவை துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். விரைவில் மத்திய அரசு இந்த இணைப்புக்கான ஒப்புதலை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 
    ×