search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deed fraud"

    • பத்திரப்பதிவில் மோசடி செய்த சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மதுரை வடக்கு சார் பதிவாளர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார்.

    மதுரை

    மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்தவர் பால நமச்சிவாயன். ரஜினி மன்ற பிரமுகரான இவர் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது-

    நான் மதுரை பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். மதுரை இலந்தைகுளம் கிராமம் வளர் நகர் பகுதியில் எனக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 37 சென்ட் இடத்தை கள்ளிக்குடியை சேர்ந்த சரவணன், அவரது மனைவி கலைவாணி, சீனிவாசன், ஜெகன் குமார், கார்த்திக் ஆகியோர் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு போலீஸ்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சட்டவிரோதமாக மீண்டும் பத்திரப்பதிவு செய்து நீதிமன்றத்தை அவ மதிப்பதுடன், சட்டத்திற்கு புறம்பாக மேற்படி நபர்கள் போலி ஆவணங்களை வைத்து பல்வேறு நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்து என்னை மோசடி செய்து வருகின்றனர்.

    இதற்கு மதுரை வடக்கு சார் பதிவாளர் உடந்தையாக செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவ டிக்கை எடுப்பதுடன் மோசடியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவையும் உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×