search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death karunanidhi"

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

    மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.ே.கஎஸ் இளங்கோவன், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், சின்னையன், பொருளாளர் பழனிச்சாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ. பிரகாஷ்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, ஒன்றிய செயலாளர்கள் சின்னசாமி,குணசேகரன் செங்கோட்டையன், சாமி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி. ரவி துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன். திமுக மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் கோட்டைப் பகுதி செயலாளர் ராமச்சந்திரன் கிங் பூபதி.

    ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் கோபால், பகுதி செயலாளர் நைனாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. சந்திரசேகர் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ்.

    விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல அமைப்புச்செயலாளர் விநாயகமூர்த்தி ,மாநகராட்சி செயலாளர் அம்ஜத் கான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தொழிற்சங் தலைவர் ஜெகநாதன் மக்கள் நீதி மையம் கட்சியின் கிழக்குத் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தம் எம் ராஜேஷ்.

    திராவிடர் கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    மல்லிகை அரங்கில் தொடங்கிய ஊர்வலம் சத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் வீதி மணிக்கூண்டு கனி மார்க்கெட் பன்னீர் செல்வம் பார்க் வழியாக காளைமாடு சிலை அருகே போட்டு சிம்மில் நிறைவடைந்தது.

    பின்னர் இரங்கல் கூட்டம் நடந்தது கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கும், அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.ஈ.பிரகாஷ் நன்றி கூறினார்.

    ×