என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dead fish floating in"
- குளத்தில் தண்ணீர் வெளியேறும் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தது.
- மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டது கனிராவுத்தர் குளம். ஈரோடு-சத்தி ரோட்டில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குளம் பல்வேறு அமைப்பு களால் தூர் வாரப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த குளம் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் குளத்தின் கரையை சுற்றி அமைக்கப்ப ட்டுள்ள நடைபாதையில் பலரும் நடைப்பயிற்சி மேற்கொண்டி ருந்துள்ளனர்.
அப்போது குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், நேற்று இந்த குளத்தில் சிலர் நிறைய மீன்களைப் பிடித்து சென்றனர். இன்று காலையில் அதே இடத்தில் தற்போது மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதற்கான காரணம் என்னவென்று தெரிய வில்லை என்றனர்.
திடீரென குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது அப்பகுதி மக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தை யும் ஏற்படுத்தி உள்ளது. மீன்கள் இறந்ததுக்கான காரணம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்