search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Danger of accidents due to"

    • சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.
    • விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் எஸ்.ஆர்.டி.நகர் அருகில் சாக்கடை கழிவுநீர் போகும் வடிகால் பள்ளம் உள்ளது.

    இதில் பவானிசாகர் சாலை எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் மற்றும் பழைய மார்க்கெட் பின்புறம் உள்ள வீதிகளில் இருந்தும் வரும் சாக்கடை கழிவுநீர் அனைத்தும் எஸ்.ஆர்.டி. நகர் அருகே உள்ள சாக்கடை வடிகால் பள்ளத்தில் வந்து சேருகிறது.

    இதில் மழை காலங்களில் அந்த சாக்கடை கழிவுநீர் பள்ளம் நிரம்பி சாலைகள் முற்றிலும் தெரியாமல் ஆறாக ஓடுகிறது.

    மேலும் பவானிசாகர் சாலையில் இருந்து எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் செல்லும் அப்பகுதி மக்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    மேற்படி இருபுறமும் சாக்கடை கழிவுநீர் பள்ளம் இருப்பதால், அது மழைக்காலங்களில் நிரம்பி வழிவதால் நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    ×