என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cuddalore protest"
- கடலூர் கம்மியம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு லாரிகளை சிறை பிடித்தனர்.
- மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏராளமாக உள்ளது.
இங்குள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளை காலை நேரத்தில் பள்ளியில் விடவும், மாலை நேரத்தில் அவர்களை அழைத்து செல்லவும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் வந்து செல்கிறார்கள்.
இதனால் இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் ரெயில்வே கேட் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இங்குள்ள ஜவான் பவான் பைபாஸ் சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் இங்குள்ள சிப்காட் பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்த கனரக வாகனங்கள் அதிக அளவு பாரத்தை ஏற்றி வருவதுடன் அதி வேகமாகவும் செல்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் போலீசில் புகார் செய்தனர்.
ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் கவுன்சிலர் சரவணன் தலைமையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த லாரிகளையும் சிறை பிடித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. இதனை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.
மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி - வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், எய்ட்ஸ் தடுப்பு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த மற்றும் வெளி முகமை தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும். இராணுவ தளவாட தொழிற்சாலை, ரெயில்வே, ஆயுள் காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகம், விமானம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். தேசிய பணமாயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும்.
அனைத்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அரி கிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நிர்வாகிகள் மனோகரன், மருதவாணன், மகேஷ், ராஜேந்திரன், ஆசைத்தம்பி, வைத்தியலிங்கம், சுரேஷ்பாபு, கிறிஸ்டோபர், கிருஷ்ணன், குமரவேல், அனுசியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநில செயலாளர் டானியல் ஜெய் சிங் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த கும்பலை கைது செய்யக் கோரி கடலூரில் சி.ஐ.டி.யூ., வாலிபர் சங்கம், மாதர் சங்கம்-மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நகர செயலாளர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கருப்பையா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சுப்புராயன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தேன்மொழி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அமர்நாத், அனைத்து குடியிருப்பு கூட்டமைப்பின் மாவட்ட பொதுசெயலாளர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #PollachiCase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்