search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crowds of people at farmers markets"

    • மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
    • இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    சேலம்:

    மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இதையொட்டி காய்கறிகள் பழங்கள் வாங்கி படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் கோவில்களிலும் சிறப்பு பூைஜகள் நடந்தன. இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    உழவர் சந்தைகள்

    இதையொட்டி சேலம் மாவட்ட உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே பொது மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறிப்பாக சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்ைட, சூரமங்கலம், தாதகாப்பட்டி உழவர் சந்தைகள் மற்றும் பால் மார்க்கெட், ஆற்றோரம மார்க்ெகட், கடை வீதி உள்பட காய்கறி மார்க்கெட்டுகளிலும் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதனால் காய்கறிகளிள் விலை சற்று அதிகரித்து காண்ப்பட்டது.

    தக்காளி 10 முதல் 16 ரூபாய் வரையும், உருளை கிழங்கு 32-50, சின்ன வெங்காயம் 60-65, பெரிய வெங்காயம் 36-40, பச்சை மிளகாய் 22-26, கத்திரி 22-25, வெண்டைக்காய் 14, முருங்கைக்காய் 30-70, பீர்க்கங்காய் 32-35, சுரக்காய் 12-15, புடலங்காய் 14-18, பாகற்காய் 32-35, தேங்காய் 25-28, முள்ளங்கி20, பீன்ஸ் 75-85, அவரை40-45, கேரட் 44-48, மாங்காய் 70-80, வாழைப்பழம் 40-60, கீரைகள் 20-24, பப்பாளி 25-30, கொய்யா 50-40, ரூபாய்க்கும் விற்பனையானது.

    பூ மார்க்கெட்

    சேலம் பழைய பஸ் நிலைய வணிக வளாகம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் தற்காலிகமாக செயல்படுகிறது. இந்த பூ மார்க்கெட்டுக்கு சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த பூ மார்க்கெட்டில் இன்று காலை முதலே அதிக அளவில் பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டிருந்தது. பூக்களை வாங்கவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். இதனால் பூக்கள் விலை சற்று அதிக மாக இருந்தது. ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் பூக்களை அதிக அளவில் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.   

    ×