search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cow meat"

    ராஜஸ்தான் மாநிலம் கோவிந்த்கார் பகுதியில் 40 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்ட சம்பவம் அறிந்த எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    வடமாநிலங்கள் பலவற்றில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாட்டு இறைச்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் கடுமையான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் மாட்டு இறைச்சி வைத்திருப்பவர்கள் மீது தாக்குதலிலும் ஈடுபடுகிறார்கள்.

    சமீபத்தில் ஆல்வார் பகுதியில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக ரக்பர்கான் என்பவரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது. இதனால் ராஜஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கோவிந்த்கார் என்ற இடத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்ததாக 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்டது.

    ராஜஸ்தானில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாட்டை வெட்டிய ‌ஷகில் மற்றும் அவரது நண்பர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடி வருகின்றனர்.

    மாட்டு இறைச்சி கைப்பற்றப்பட்ட வி‌ஷயம் தெரிந்ததும் அதன் எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. அவர்கள் ஊர்வலமாக வந்து எதிர்ப்பு கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    பசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உ.பி.யின் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ளார். #Cow
    லக்னோ:

    ராஜஸ்தானின் ஆல்வார் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பசுக்களை கடத்தியதாக கூறி ஒருவர் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. 

    இதற்கு விளக்கம் அளித்த உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பசுக் காவலர்கள் என்ற போர்வையில் செயல்படுபவர்கள்
    சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. மீறி செயல்படுபவர்கள் மீது கட்ட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்தார். 

    இந்நிலையில், முஸ்லிம்கள் பசு மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என உ.பி.யின் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசு மாமிசத்தை முஸ்லிம்கள் நிச்சயம் நிறுத்த வேண்டும். மேலும், பசுக்களை கொல்வதையும் அவர்கள் விட்டுவிட வேண்டும்.

    பசு கொலை தடுத்து நிறுத்தப்பட்டால் கும்பலால் அடித்து கொலை செய்யப்படும் நிகழ்வுகள் தானாகவே நின்று விடும்.
      
    இந்த விஷயம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் கூறிய கருத்தை நான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ஆல்வார் சம்பவத்தின் சோகங்கள் மறையாத நிலையில், இது போன்ற சர்ச்சை கருத்துக்களால் பரபரப்பு ஏற்படுகிறது என மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    பசு இறைச்சி தின்பதை நிறுத்தினால் குற்றங்கள் குறையலாம் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Cow
    ×